பொதுவாக இந்த உலகில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், அதற்கு ஈடாக நாள்தோறும் பிறப்புகளும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்த உலகம் இறந்து போன அனைவரையுமே நினைவில் கொள்வது கிடையாது.

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இறந்தாலும் அவர்களின் அடையாளத்தை விட்டு செல்வார்களாம்.

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

இவர்கள் இறந்தாலும் அவர்களின் சாதனைகளை மற்றவர்கள் நினைவுகூறும் வகையில் சாதனைகளை நிகழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

சிம்மம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தலைவர்களாக பிறப்பெடுப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆட்சிதான் இருக்கும்.

காட்டிற்கு ராஜாவாக இருக்கும்  சிங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் இந்த நெருப்பு ராசியினர்  மற்றவர்களை வழிநடத்துவதற்காகவே பிறந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 

இவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு, பிரகாசமான நம்பிக்கை ஆகியற்றின் விளைவாக இவ்வுலகில் தவிர்க்க முடியாத அடையாளத்தை உருவாக்குவார்கள். இந்த ராசியினர் உலகைவிட்டு பிரிந்தாலும், இவர்கனின் சாதனைகள் நிலைத்திருக்கும். 

விருச்சிகம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான நபர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இலக்கை அடைவதில் தங்களின் முழுமையான உழைப்பையும், கவனத்தையும் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் வலியை சக்தியாகவும், போராட்டங்களை புரட்சியாகவும், வடுக்களை வலிமையாகவும் மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் இருக்கும் இடத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இறந்தாலும் இவர்கள் செய்த சாதனைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

மகரம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

மகர ராசிக்காரர்கள் கனவுகளை நிஜமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சாதிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

மற்றவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத விடயங்களை இவர்கள் சாதாரணமாக செய்வார்கள். சனியால் ஆளப்படும் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் செயலாகும் போது உலகத்தையே வியப்பில் ஆழ்த்தும்.

இவர்கள் இறந்த பின்னரும் இவர்களில் சாதனைகளை உலகம் போற்றும். இவர்கள் சமூத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.