ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பிக்கை நிழவுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே நட்பின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாவும், நட்புக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.அப்படி நட்புக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சாகசத்தை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லா உறவுகளை விடவும் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே உண்மையாக ஒருவருடன் நட்பு கொண்டால் இவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
நண்பர்களை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். புதிய நண்பர்களை உருவாக்கக்கூடிய சமூக சூழ்நிலைகளில் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். யாரிடடும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை எளிதாக பகிரை்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இவர்ககளிடம் நம்பி பழகும் நண்பர்களுக்கு மிகவும் விசுவாசமான மற்றும் உண்மையான நண்பராக இருப்பார்கள். இவர்களுடன் நட்பு கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். காரணம் இவர்கள் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால், நிச்சயம் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சமநிலையையும் அமைதியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பாரை்கள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நிம்மதியையும், சமநிலையையும் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் உறவுகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் மற்றவர்களுக்கு உதவ அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்யும் உன்னத குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
குறிப்பாக இவர்கள் நல்ல நண்பனுக்கு சிறந்த உதாரணமாக இருப்பார்கள். இவர்கள் நட்புக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.