2025ம் ஆண்டில் ஆனி மாதம் ஜூன் 15ம் திகதியான ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. சூரியன், மிதுன ராசிக்குள் நுழையும் இந்த நாளை மிதுன சங்கராந்தி என்றும் அழைப்பது உண்டு. இந்த நாளிலும் சரி, ஆனி மாதத்திலும் சரி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். எப்போதும் பணத்திற்கு குறைவு என்பதும், கஷ்டம் என்பதும் ஏற்படாது. மேலும், கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நன்னாளில் என்ன தானம் செய்தால் நல்லது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
சூரியன், மிதுன ராசிக்குள் நுழையும் மாதம் ஆனி மாதமாகும். இந்த ஆண்டு ஜூன் 15ம் திகதி துவங்கி,ஜூலை 16ம் திகதி வரை ஆனி மாதம் உள்ளது. சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் ஆனி மாதம் பிறப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த மாதம் முடிவதற்குள் சில பொருட்களை உங்களை முடிந்த அளவிற்கு தானம் செய்தால் நல்லது நடக்கும்.
உணவு தானம்
ஆனி மாத பிறப்பன்று உணவு தானம் செய்வது நல்லது. இது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். "அன்ன தானம் அனைத்து தானத்திலும் சிறந்தது" என்று இந்து மதத்தில் சொல்லப்படுகிறது. உணவு தானம் செய்தால் வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டம் இருக்காது. வீட்டில் செல்வம் பெருகும். உணவு தானம் செய்வது மகிழ்ச்சியைத் தரும். நாம் நினைத்த காரியங்கள் நடக்கும்.
தண்ணீர் தானம்
ஆனி மாதம் கோடை காலத்தின் நிறைவாக வருகிறது. அதனால் தண்ணீர் தானம் செய்வது மிகவும் புண்ணியம். தண்ணீர் தானம் செய்தால் கடவுள்களும், முன்னோர்களும் சந்தோஷப்படுவார்கள். கோடை காலத்தில் தண்ணீர் தானம் செய்வது ரொம்ப நல்லது. "ஜல தானம்" என்று சொல்வார்கள். இது முன்னோர்களின் ஆத்மாவை சாந்திப்படுத்தும். மன அமைதி கிடைக்கும்.
பருப்பு தானம்
ஆனி மாதத்தில் பச்சை பயிறு தானம் செய்வது நல்லது. பாசிப்பருப்பாகவும் தானம் செய்யலாம். இப்படி தானம் செய்தால் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவடையும். இதனால் பேச்சுத்திறமை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் கூடும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பாசிப்பருப்பு பருப்பு தானம் செய்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும். தகவல் தொடர்பு திறனும் அதிகரிக்கும்.
இனிப்பு தானம்
சர்க்கரை, வெல்லம் அல்லது இனிப்புகளை தானம் செய்யுங்கள். இதை பிராமணர்களுக்கு, குழந்தைகளுக்கு அல்லது கோவிலுக்கு கொடுக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இது வீட்டில் நல்லிணக்கத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் அதிகம் நடக்க துவங்கும்.
தாமிரப் பொருட்கள் தானம்
ஆனி மாதத்தில் தாமிரம் தானம் செய்வது சிறந்தது. தாமிரம், சூரியனுக்கு பிடித்த உலோகம். தாமிரப் பொருட்கள் அல்லது நாணயங்களை பிராமணர்களுக்கு தானம் செய்யலாம். ஏழைகளுக்கு கொடுத்தாலும் நல்லது. இப்படி செய்தால் சூரிய தேவன் சந்தோஷப்படுவார். இது மரியாதை, ஆரோக்கியம் மற்றும் நல்ல சக்தியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.