12 ராசிக்காரர்களில் பல விடயங்களுக்கு அதிகமாக பயத்தை வைத்துக் கொள்ளும் சுபாவத்தைக் கொண்ட ராசியினர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒருவரது நட்சத்திரம், ராசியினை வைத்து அவரவர்களின் சுபாவத்தை எளிதில் கணித்துவிட முடியும். சில ராசியினர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டும், சிலர் கம்பீரமாக தைரியத்துடன் காணப்படுவார்கள்.
ஆனால் ஒரு சில ராசியினருக்கு எதை பார்த்தாலும் பயத்துடனே காணப்படுவார்கள். அந்த வகையில் பயந்த சுபாவம் கொண்ட ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடக ராசி
மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கும் கடக ராசியினர், எப்பொழுதும் தனது நண்பர்களை பிரிந்து விடுவோமோ என்ற பயத்துடனே இருப்பார்கள். இவ்வாறான பயம் காணப்பட்டாலும், மற்ற விடயங்களில் துணிச்சல் மிக்கவர்களாகவே இருப்பார்களாம்.
கன்னி ராசி
கன்னி ராசியினர்கள் அனைத்து விடயத்தையும் மிகவும் சரியாக செய்வதற்கே விரும்புவார்கள். அதாவது அவர்கள் செய்யும் காரியத்தில் தவறுகள் நடந்துவிடுமோ என்று பயமும் இவர்களுக்குள் இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியினர்கள் எப்பொழுதும் எதையாவது ஒன்றினை தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் யாராவது தன்னை ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயத்திலும் இருப்பார்கள்.
மகர ராசி
மகர ராசியினர் அனைத்து விடயத்திலும் கவனமாகவும், நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் மனதில் தனது வெற்றி போய்விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்குமாம்.