தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று கொலையுதிர் காலம்.

ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் பெரும் தோல்வியைத் தழுவியது. 2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சக்ரி டோலட்டி என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக தான் மிகவும் வெட்கப்படுவதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தின் ஸ்க்ரிப்டை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டது தான் என் தவறு எனவும் தெரிவித்ததாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன.

நயன்தாரா இவ்வாறு கூறிய தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.