ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடமாற்றுவார்கள்.
அந்த நேரங்களில் சில ராஜ யோகங்கள் உருவாகும். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
அந்த வகையில் 1 வருடத்திற்கு பின் மிதுன ராசியில் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் இங்கே பார்க்கலாம்.

மிதுனம் |
- மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
- உங்களுடைய ஆளுமை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் மரியாதை கிடைக்கும்.
- வாழ்க்கை துணை முன்னேற்றம் பெறுவார்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- கூட்டாக செய்யும் தொழில் லாபம் தரும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- வேலைகளை திட்மிட்டபடி முடிக்கலாம்.
|
துலாம் |
- துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைககும்.
- பொருளின் மூலம் வசதி அதிகரிக்கும்.
- வெளி பயணங்கள் செல்ல நேரிடும்.
- பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும்.
- தொழிலில் நிதி ஆதாயம் கிடைக்கும்.
|
கன்னி |
- கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாகவுள்ளார்.
- வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- எடுக்கும் வேலையில் வெற்றி.
- பணப்பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
- ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- புதனின் ஆசிர்வாதம் முழுதாக கிடைக்கும்.
|