பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் எனவும் ஆசை இருப்பது இயல்பு தான்.
ஆனால் எல்லோருக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்துவிடுவது கிடையாது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான வாய்பு அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி பிறப்பிலேயே பில்லேனியர் ஆகும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.
இவர்கள் இரவும் பகலும் கடின உழைப்பை வழங்கி அவர்கள் விரும்புவதைப் பெறுவார்கள். எனவே, ரிஷப ராசிக்காரர்கள் 10% பேர் கோடீஸ்வரர்களாக மாற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களின் உழைப்பில் நீதியும் நேர்மையும் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். மற்றவர்களிடம் உண்மையை மட்டுமே பேசுவதில் இந்த ராசியினர் பெயர் பெற்றவர்கள். இவர்களின் நேர்மையும் இவர்களை கோடீஸ்வராக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் தங்கள் மூளையை அதன் சிறந்த திறனுக்கு பயன்படுத்துகிறார்கள். கோடீஸ்வரராக வெற்றி பெறுவதற்கான 8% வாய்ப்புகளுடன், அவர்கள் தங்கள் மனதை அதில் செலுத்தி வெற்றிகாணலாம்.
இவர்களுக்கு பிறப்பிலேயே செல்வ செழிப்பு நிறைந்த ஆடம்பர வாழ்க்கையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டிப்பார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் நகைச்சுவை மற்றும் அர்ப்பணிப்பு இரண்டையும் கொண்டுடவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் கோடீஸ்வர அந்தஸ்தை அடைவதற்கான 7.5% வாய்ப்புகள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த இலக்கை மனதில் கொண்டு தங்கள் வாழ்க்கையை ஒரே படகில் பயணிக்க முயற்சித்தால் இவர்கள் உலக பணக்கார பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்துவிடுவார்கள்.