ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் காதல் வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, மற்றும் விசேட குணங்களில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் அதை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி பணத்தை விட உறவுகள். பாசம் மற்றும் காதலை பெரிதாக நினைக்கும் உன்னத குணம் கொண்ட ராசினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அன்பானவர்களாகவும், அன்புக்காக ஏங்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு எப்போதும் பணத்தை விடவும் காதல் தான் முக்கியம். உண்மையான காதலை விட உதுவும் பெரிதில்லை என்ற எண்ணம் இவர்களிடம் உறுதியாக இருக்கும்.
பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் உண்மையான காதலை இழந்துவிட்டால், ஒருபோதும் மீட்டெடுக்கவே முடியாது என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாகவும், பணம் சம்பாதிப்பதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் பணமா அல்லது காதலா என்று வரும்போது இந்த ராசியினர் நிச்சயம் காதல் தான் என்று முடிவு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் காதலுக்கு நிகராக எதை வைத்தாலும் ஒரு நொடி கூட சிந்திக்காமல் காதவில் பக்கம் சாய்ந்துவிடுவார்கள். இந்த ராசியினர் துணையின் உயர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் லாஜிக்காக சிந்திக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் காதல் தொடர்பான விஷயங்களில் மட்டும் உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உலகத்து இன்பங்களின் மீதும் அதிக ஆசை கொண்டவர்களாக இருக்கும் அதே நேரம் திருமண பந்தத்தையும். வாழ்க்கை துணையையும் அதிகம் மதிப்பவர்களாக இருப்பார்கள்.