பொதுவாகவே இன்றும் பலரின் மத்தியில் பில்லி சூனியம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது.

அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையிலும் கூட மனிதர்களால் துள்ளியமாக கணிக்க முடியாத எத்தனையோ அமானுஷ்யம் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க... ஜாக்கிரதை! | How To Understand You Are Under Black Magic Spell

இப்படிப்பட்ட விடயங்களுள் ஒன்று தான் சூனியம். அந்தவகையில் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதை உணர்த்தம் அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலும் சூனியத்தின் நல்ல பயன்பாட்டை விட தவறான பயன்பாடே அதிகமாகவுள்ளது. பொதுவாக தங்கள் எதிரிகளை வெல்ல சூனியத்தை பயன்படுத்துகின்றனர். சூனியம் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை சில அறிகுறிகளால் அறிய முடியும்.

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க... ஜாக்கிரதை! | How To Understand You Are Under Black Magic Spellசூனியத்திற்கு ஆளான எந்தவொரு நபரும் தனது கட்டுப்பாட்டை இழக்கிறார். அத்தகைய நபர் விசித்திரமான விஷயங்களைச் செய்யத் தொடங்குகிறார். ஒரு நபர் திடீரென எந்த காரணமும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டால், அந்த நபர் சூனியத்தால் பாதிக்கப்படலாம் என்பதை புரிந்து கொள்ளலாம். 

வீட்டில் உள்ள துளசி செடி திடீரென காய்ந்து போனால் அல்லது இறந்த பறவை வீட்டின் முற்றத்தில் விழுந்தால், இந்த அறிகுறிகள் அசுபமாக கருதப்படுகிறது.இது சூனியத்தின் விளைவாகவே இது நடக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க... ஜாக்கிரதை! | How To Understand You Are Under Black Magic Spell

ஒருவரது இயல்பில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு, தான் எது செய்தாலும் சரி என கூறிக்கொள்ள ஆரம்பித்தால், அந்த நபர் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையே குறிக்கின்றது. 

நீங்கள் திடீரென்று வேலை அல்லது வியாபாரத்தில் ஆர்வமற்றவராக உணர்ந்தால் மற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதாகவே அர்த்தம். 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க... ஜாக்கிரதை! | How To Understand You Are Under Black Magic Spell

சூனியத்தின் விளைவு காரணமாக, ஒரு நபர் தனிமையை உணரத் ஆரம்பிக்கின்றார். மேலும் சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் நகங்களின் நிறம் கருப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும். 

ஒருவருக்கு பெரும்பாலும் இரவில் பயங்கரமான கனவுகள் வந்தால், அவர் சூனியத்தின் தாக்கத்தில் இருக்கின்றார் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது.