இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் 12 வயது பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் 10 முறை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாய் ஆதித்யா காம்ப்ளேவை கண்டித்துள்ளார். இந்நிலையில், மாணவி நேற்று மாலை பள்ளியை முடித்துவிட்டு அங்கிருந்து டியூசன் சென்றுவிட்டு தாயாருடன் வீட்டிற்கு சனெ்றுள்ளார்.

அப்போது மாணவியின் வீட்டின் அருகே மறைந்திருந்த ஆதித்யா திடீரென வந்து சிறுமியின் தாயை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து தாயின் கண்முன்னே 10 முறை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்த வௌ்ளத்தில் சரிந்த சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து பினாயிலைக் குடித்து ஆதித்யா தற்கொலைக்கு முயன்றதால் அவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமுதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் குறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.