மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று அவர்கள் வழக்கம்போல் காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் கல்லூரி திறக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பு தெரியவந்ததால் கல்லூரி மூடப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கூறுகையில், ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மாணவ- மாணவிகளின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இணைய தள வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும். வருகிற 22-ந்தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்படும் என்றார்.
ஆசிரியருக்கு கொரோனா-கல்லூரி மூடப்பட்டது
- Master Admin
- 19 February 2021
- (888)

தொடர்புடைய செய்திகள்
- 02 February 2021
- (470)
ஆன்லைன் ஆப் மூலம் விவசாயிகளிடம் பல லட்சம...
- 28 November 2020
- (629)
சிறுமிக்கு திருமணம்- வாலிபர் உள்பட 3 பேர...
- 01 April 2024
- (180)
இட்லி, தோசையுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு...
யாழ் ஓசை செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்
- 24 April 2025
இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
- 24 April 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.