உடலுக்கு சக்தியை தருவதில் பழ வகைகளும் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றாக பேரிச்சம்பழமும் அடங்குகின்றது.பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் கோடானு கோடி நன்மை கிடைக்குமென கூறுகின்றனர் மருத்தவர்கள்

தினமும் மூன்று பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

பேரிச்சம்பழத்தால் இத்தனை நன்மைகளா..! | So Many Benefits Of Dates

இதன்படி பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கல்லீரல் பலப்படும் என்றும் இதய நலனுக்கு பேரிச்சம்பழம் நல்லது என்றும் பக்கவாதம் மாரடைப்பு கொழுப்பு போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

வைட்டமின் ஏ அதிகம் உள்ள பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அதே புற ஊதா கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை கவசமாக இருந்து காக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் இருக்காது என்றும் உடல் வலி, தொற்று நோய்களிலிருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது