தற்போது காதல் என்ற ஒன்று இந்த சமூக வலைத்தளங்களினால் மிகவும் வித்தியாசமான முறையில் மாறிக் கொண்டு வருகின்றது.

அதிலும் இந்த பேஸ்புக் காதல் ஒவ்வொருவருக்கு திருமணம் வரை சென்றாலும், ஒவ்வொருவருக்கு அது ஏமாற்றத்தையும் மோசடிகளையும் தான் கொடுக்கிறது.

பேஸ்புக் மோகமும் பண மோகமும் அதிகரித்துக் கொண்டு போனதன் விளைவாக நாட்டில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் பல பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தாலும் அதனை ஒரு சிலர் விரும்பி ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படி 47 வயது நபர் ஒருவர் 17 வயது இளைஞனைப் போல தோற்றமளித்து பல பெண்களை பலியாக்கிய சம்பவம் ஒன்று தான் நிசப்தம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.