சுகாதார வழிமுறைகளை மீறி மட்டக்களப்பு, கொட்டமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைக்க மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (10) நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்போது, குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு நகரில் சுகாதார வழிமுறைகளை மீறிய 110 பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் வைத்து ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசம் அணியாமல் இருந்து 548 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேருக்கு நேர்ந்த கதி!
- Master Admin
- 11 May 2021
- (1610)

தொடர்புடைய செய்திகள்
- 20 April 2025
- (64)
இந்த ராசியினரை காதல் செய்வதற்கு முன் இரு...
- 24 April 2025
- (42)
இந்த ராசியினர் billionaire ஆகும் வாய்ப்ப...
- 13 April 2021
- (676)
5 மாகாணங்களில் உள்ள மக்களுக்காக விஷேட அற...
யாழ் ஓசை செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்
- 24 April 2025
இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
- 24 April 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.