ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து தொழிற்துறையினர், வணிகர்களுடன் முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாளைமுதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தொழில் நிறுவனங்களின் தேவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.