பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றே கூறலாம்.
ஆம் ஒரு குடும்பப்பெண் வீட்டுப் பொறுப்புகளையும், குடும்பத்தினையும் அவதானிப்பதோடு, தொழில் செய்வதற்கும் எடுக்கும் முயற்சியினை இதில் காட்டப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருக்கும் கணவர், மனைவியின் கஷ்டத்தினை புரிந்து கொள்ளாமல் சதா நேரமாக திட்டித் தீர்த்து வருகின்றார். அதிலும் சமீப நாட்களில் அவரது பெண் செய்த தவறுக்கு மனைவியின் தொழில் தான் காரணம் என்று கூறியதோடு, வாக்குவாதமும் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகள் மற்றும் வெளியாகியுள்ள ப்ரோமோ கோபி மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் சதீஷ்க்கு மோசமாக மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி சீரியல் புரோமோவை பார்த்துவிட்டு பலரும் என்னை மிகவும் வக்கிரமான வார்த்தைகளால், கொடுமையாக திட்டி மெசேஜ் செய்கின்றனர்.
இது ஒரு சீரியல் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படி என்னிடம் வந்து மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.