பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் மாண்புமிகு கி சென்ஹொங் நேற்று (01) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வின் போது இலங்கைக்கு சீனா அளித்த நிலையான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் நேர்மையான பாராட்டுக்களை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை விஷேட முதலீட்டு வலயம் ஆகியவற்றில் மூன்றாம் தரப்பு நாடுகளுடனான முதலீடு மற்றும் வணிக வாய்ப்புக்களைத் தொடருவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை சீனத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மாணவர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் அறிஞர் குழுவினரின் பங்களிப்புடன் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் ஏற்பாடு செய்து வரும் அங்குரார்ப்பணக் கருத்தரங்கு / வெபினார் தொடரில் பங்கேற்பதற்காக தூதுவர் மாண்புமிகு கி சென்ஹொங்க்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்ததுடன், அதனை சீனத் தூதுவர் தயவுடன் ஏற்றுக்கொண்டார்.
சீனாவின் ஆதரவுக்கு இலங்கை பாராட்டு
- Master Admin
- 02 April 2021
- (442)

தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (595)
தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம்...
- 23 November 2020
- (352)
யாழ்ப்பாணத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்
- 01 March 2025
- (156)
சக்கிரனின் வக்கிரப் பயணம்.., அளவில்லா செ...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.