கிருலப்பனை - அதிவேக நெடுஞ்சாலை வீதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே பயணித்த முச்சக்கர வண்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் போதே இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் இரண்டு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் குறித்த அனர்த்தம் ஏற்படும் போது அவர்கள் வெளியே குதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.