ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 1000 படுக்கைகளுடன் சிறப்பாக செயற்படுகிறது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியை 2 ஆயிரம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நோயாளிகள் வசதிக்காக ஒக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றன.
சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில்இ ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.