லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன இராணுவம் சுமார் ஒரு கி.மீ தூரம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கல்வான் நதிவளைவில் இருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகவும், கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய இராணுவம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி சீன இராணுவம் 1 முதல் 2 கி.மீ தூரம் வரை பின்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் கனரக வாகனங்கள், ஆயுதங்கள் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் காணப்படுவதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.