தஞ்சாவூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஏற்கனவே தஞ்சையில் 7 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் புதிதாக 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை அருகே வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.