தமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எண்ணிக்கையில் கடந்த மூன்று நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் 180 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று காரணமாக, அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.