குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் சன்னதிதெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி. இந்த மூவரும் சன்னதிதெரு நூலகம் முன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென்று  அந்நூலகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளி ராஜசேகரன் தன்கையில் கொண்டுவந்த பொட்ரோலை அவர்கள் மூவரின் மீதும் ஊற்றி தீவைத்துக் கொழுத்தினார்.

இதனால் அவர்கள் மூவரும் பதறிபோய் அலறிக் கொண்டு அங்குமிங்கும் உடம்பில் தீப்பிடித்து ஓடியுள்ளனர். இதில் தீ காயம் அடைந்த மூவரையும் மீட்ட அப்பகுதியினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவீர சிகிச்சை அளிக்கபடுகிறது. இதில் சதீஷ் மற்றும் வெங்கடேஷ் பலத்ததீக்காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். காளிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து  ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடம் வந்து  விசாரணை நடத்தினர். மேலும்,  தீவைத்து கொளுத்திய ராஜசேகரனை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் வீட்டை பூட்டிகொண்டு உள்ளே இருந்துகொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து  ராஜசேகரனை  பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரின் மீதும் ராஜசேகரன் பெட்ரோலை ஊற்றினார்.


பின்னர்,  ராஜசேகரன் வீட்டின் பின்பக்கமாக தப்பித்து ஓடியுள்ளார். மேலும், பொட்ரோல் கேனை எடுத்து அதில் உள்ள பொட்ரோலை தன் மீது ஊற்றி கொளுத்தியத்தில் அவர்மீதும் தீ வேகமாக பரவியிருக்கிறது. போலீசார் அவரை காப்பாற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் 95 சதவீத தீ காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசாரின் விசாரணையில், ராஜசேகரன் கோவில்களில் பூஜை செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலில் பூஜை வேலை செய்வதால் தன்னை வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்வதாக நினைத்துள்ளார்.இதனால் காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் அவர் அவதூறு பரப்பி உள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மனப்பான்மை காரணமாக 3 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த்தாக கூறப்படுகிறது.