ஓட்டேரியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமதுஆசான் என்பவருக்கும் கடந்த 13-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
முகமதுஆசானின் நடத்தை சரியில்லாததால் இளம் பெண்ணின் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதன் பின்னர் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே முகமது ஆசான் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது அந்த பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருந்தார்.
திருமணம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த முகமது ஆசான் இளம்பெண்ணின் ஆபாச படத்தை தனது நண்பர்களுக்கு செல்போனில் அனுப்பினார்.
இதுபற்றி அறிந்த இளம்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுஆசானை கைது செய்தனர்.