ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாததால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருவது தெரிந்ததே. குறிப்பாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெங்குவின்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் ஆகின.
இந்த நிலையில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷை அடுத்து வரலட்சுமி நடித்துள்ள ’டேனி என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரலட்சுமி நடித்துள்ள ‘டேனி’ திரைப்படம் ஜீடிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'டேனி திரைப்படத்தை சாந்தமூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார். இவர் பிரபல இயக்குனர் சற்குணம் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கொலைக்கு காரணமான மூன்று நபர்களை போலீஸ் அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் டேனி என்ற ஒரு நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுவரை ஓடிடியில் ரிலீஸான திரைப்படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ள நிலையில் ‘டேனி’ சினிமா ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.