சென்னை தண்டையார்பேட்டை சஞ்சய் காந்தி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவரது மகன் நூர் முகமது (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.


இந்தநிலையில் அவர்,கடந்த 2-ந் தேதி காலை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடி கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில், வலது பக்கம் விலா எலும்பு முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு மேலும் வலி அதிகமானதால் கடந்த 9-ந் தேதி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நூர்முகம்மது நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.