திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தமிழேந்தி (வயது 10), மகன் கவிமணி..

இதில் தமிழேந்தி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள், நீச்சல் பழக தனது தோழிகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றாள். அங்கு அவள், தனது உடலில் சேலையைக் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகினாள்.