காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்கில் பனியால் கட்டப்பட்டு வீட்டைப் போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான காஷ்மீரிலும் ஏராளமான மக்கள் சுற்றுலாவுக்கு குவிந்து வருகின்றனர். குளிர் காலம் என்பதால் காஷ்மீர் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சியளிப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். இதனால் முக்கிய சுற்றுலா தலமான குல்மார்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பனிக்கட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பனிக்கட்டி உணவகம் கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.