நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் நாளை பதவியேற்க போகிறார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் எந்தெந்த கோப்புகளில் முதலில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே, கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

இதனால், ஸ்டாலின் நாளை முதல்வரானதும் இதுதொடர்பான கோப்புகளில் கையழுத்திடுவார் என கூறப்படுகிறது.

மேலும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 தரும் திட்டம் தொடங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.