களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுமி, கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறுமியின் தந்தை உடனடியாக கிணற்றிலிருந்து சிறுமியை மீட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இருப்பி0னும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி க.ஜீவராணியின் உத்தரவிற்கமைவாக, களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.