இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 859 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 211 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 79 பேர் குருநாகலைச் சேர்ந்தவர்கள் என்றும் களுத்துறையில் 78 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளத்தில் 47 பேருக்கும் அம்பாறையில் 22 பேருக்கும் மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் தலா 20 பேருக்கும் கேகாலையில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை காலியில் 17 பேருக்கும் மாத்தளையில் 11 பேருக்கும் இரத்தினபுரியில் 09 பேருக்கும் கண்டியில் 05 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 742 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 305 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.