மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களில் 376 காகங்கள் திடீரென இறந்தன. மத்திய பிரதேசத்தில் மேற்கு பகுதியில் உள்ள இந்தூரில் 142 காகங்களும், மான்சவுரில் 100 காகங்களும், அகர்-மல்வாவில் 112 காகங்களும் இறந்தன. இதே போல் வேறு பகுதிகளில் 22 காகங்கள் திடீரென இறந்தன.
பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.