ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
ஓமனில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 276 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 94.6 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று இரண்டு பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,499 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது உடல்நலக்குறைவால் 34 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஓமனில் குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தும், பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தும் வருகிறது.

வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.