ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 276 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 94.6 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று இரண்டு பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,499 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது உடல்நலக்குறைவால் 34 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஓமனில் குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தும், பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தும் வருகிறது.
வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 148 பேர் கொரோனாவால் பாதிப்பு
- Master Admin
- 01 January 2021
- (487)

தொடர்புடைய செய்திகள்
- 30 November 2020
- (429)
நாயுடன் விளையாடியபோது பைடன் காலில் சுளுக...
- 29 January 2021
- (568)
அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்ற...
- 14 February 2021
- (533)
பெண்களை பின்தொடர்ந்து 15 வயது சிறுவன் செ...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.