மேற்குவங்காள மாநிலம் பர்கனாஸ் மாவட்டம் மகேஸ்தலா பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், நேற்று முன்தினம் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் ஒரு காரில் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அதே காரில் பெண் ஒருவரும் இருந்தார்.


அப்போது ஆண் நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை அவருடன் சென்ற மற்றொரு பெண் தடுக்கவில்லை. அப்போது இளம்பெண் கூச்சலிட்டதால், அவரை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

நடுரோட்டில் விழுந்த இளம்பெண், தனது நண்பர்கள் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண்ணின் நண்பர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.