பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜமீன் பேரையூர்-கூடலூர் இடையே செல்லும் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. அதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அதனை கடந்து செல்வதை தவிர்க்கும் பொருட்டு, கண்காணிப்பு அலுவலரை நியமனம் செய்து, தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஏரி, ஆறு, குளம், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் நீர் வழி தடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.