ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி தனது தாயாருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். அதில் முத்துநாயக்கன்பட்டி காரைசாவடி பகுதியை சேர்ந்த தங்கராசுவின் மகன் குணசேகரன் (வயது 23) என்பவர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்