திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தட்சணாமூர்த்தி (வயது 27) என்பவர் சிறுமியை வலுகட்டாயமாக அழைத்து சென்று பொருவலூர் பகுதியில் வைத்து பாலியல்பலாத்காரம் செய்ததார். பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவுசெய்து தட்சணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.