கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி அதிக அளவில் பரவத்தொடங்கியது. இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான சேவைக்கு பல நாடுகள் தடைவிதித்துள்ளன.

 

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாநிலங்கள் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை கர்நாடக மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. தொழில்நட்ப ஆலோசனைக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த வாபஸ் முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடக மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

 

இதனடிப்படையில் பெங்களூருவில் இன்று இரவு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.