இலங்கையில் நேற்றைய (6) தினம் அடையாளம் காணப்பட்ட 127 கொவிட் தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென Covid -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இவர்களின் எண்ணிக்கை 31 ஆகும் 

இவ்வாறு, கொழும்பு மாவட்டத்திலிருந்து 29 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 22 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 12 பேர் மற்றும் கண்டி மாவட்டத்திலிருந்து 8 பேரும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலிருந்து தலா ஐந்து பேர் வீதமும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 4 பேரும், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர். 

அத்துடன் கேகாலை, பதுளை, புத்தளம், அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 19 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.