நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் ஏதும் மாற்றம் இன்றி ரூ.86.51 ரூபாய்க்கும், டீசல் விலையில் ஏதும் மாற்றம் இன்றி ரூ.79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.