மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்தவர் நாசர். இவர் கடந்த 2003 ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் கைதிகள் தங்கியிருந்த அறையில் நாசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாத கூறப்படுகிறது.


தகவலறிந்து வந்த போலீசார் நாசரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.