தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. நேற்று 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 21 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 19,333 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 19 பேர் உயிரிழந்துள்ளதால், இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.