கொலையும் செய்து, கொல்லப்பட்டவரின் இதயத்தையும் கொன்றது உட்பட ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒரு வெளிநாட்டு போர்க் குற்றவாளியின் வழக்கை முதன்முறையாக சுவிட்சர்லாந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

லைபீரியா நாட்டின் அதிபரான Charles Taylor என்பவருக்கு எதிரான கிளர்ச்சியின்போது, 18 கொலைகள், குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்துதல், வன்புணர்வு, அடிமைத்தனம், சூறையாடுதல் மற்றும் கொலைசெய்யப்பட்டவரின் இதயத்தை தின்னுதல் ஆகிய பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் ULIMO என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தளபதியான Alieu Kosiah (45).

பின்னர் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் Kosiah. இந்நிலையில், போர்க்குற்றங்களுக்காக அவர் கடந்த 2014ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், Bernஇல் கைது செய்யப்பட்டார்.

கொலையும் செய்து, கொல்லப்பட்டவரின் இதயத்தையும் கொன்றது உட்பட ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒரு வெளிநாட்டு போர்க் குற்றவாளியின் வழக்கை முதன்முறையாக சுவிட்சர்லாந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

தற்போது, அவர் மீதான போர்க்குற்றங்கள் சுவிட்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

Kosiah, தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன், ULIMO எந்த வித வெறியாட்டங்களிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். வழக்கு தொடர்கிறது.