புரெவி சூறாவளி தாக்கத்தின் காரணமாக இதுவரையில் 6 மாவட்டங்களில் 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 15 வீடுகள் முழுமையாக சேத​மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.