பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் மீண்டும் குரூப்பில் உள்ளவர்கள் நாங்கள் குரூப் தான் என்பதை நிரூபிக்கின்றனர்
நேற்று சனம், அனிதா மற்றும் ரியோ வாக்குவாதம் நடந்த நிலையில் இன்று அந்த வாக்குவாதம் குறித்து விளக்கம் அளிக்கிறார் சனம். அர்ச்சனாவின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் ரியோவிடம், சனம் தனது பார்வையை விளக்குகிறார்
இதற்கு முன்னாடி நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து குட் மார்னிங் என்றாவது சொல்லிக்கொண்டு இருந்தோம். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லாமே உடைந்து போய்விட்டது. குட்மார்னிங் கூட சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார்
அதற்கு நான் எவ்வளவோ உனக்கு விளக்கம் அளித்து விட்டேன், இதற்கு மேல் என்னால் விளக்கம் அளிக்க முடியாது, நான் ரொம்ப டயர்டா ஆகி விட்டேன் என்று ரியோ, சனம்ஷெட்டிக்கு விளக்கம் அளிக்கிறார்
வழக்கம்போல் ரியோவுக்கு ஆதரவாக அர்ச்சனா பேச, வழக்கம்போல் நிஷா மூவரும் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார்.