ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் நடக்கும் போது ராசிகளின் பலன்களும் மாறுபடும். இதில் சுப யோகங்களும் அசுப யோகங்களும் கிடைக்கும்.
அந்த வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், தேவர்களின் குருவான குருபகவானும் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் அனைத்து ராசிகளும் தாக்கத்தை எதிர்கொண்டாலும் சில ராசிகள் மட்டும் நல்ல தாக்கத்தை பெற்றுக்கொள்ளும். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்த அதிஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம் |
- மகர ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
- நீண்ட நாட்கள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வாய்ப்பு கிடைக்கும்.
- கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
- செய்யும் தொழிலில் பல லாபங்களை பெறுவீர்கள்.
- திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- நீங்கள் கடனாக கொடுத்த பணம் அனைத்தும் உங்க் கையில் வந்து சேரும்.
- எந்த துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
|
மேஷம் |
- மேஷ ராசிக்காரர்கள் கேந்திர யோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஏதாவது முதலீடுகள் முன்கூட்டியே செய்திருந்தால் அதில் லாபம் அதிகரிக்கும்.
- தொழிலதிபர்கக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
|
துலாம் |
- துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- நீங்கள் எந்த வேலையை எடுத்து செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
- திருமண தம்பதிகளின் பாச பிணைப்பு அதிகரிக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும்.
- மாணவர்களாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- மொத்தத்தில் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
|