இந்நிலையில், தேர்தல் வெற்றியை கொண்டாட ராஷ்டிரிய ஜனதா தளம் கொண்டு வந்த இனிப்புகள் தேர்தல் முடிவுகளுக்கு பின் கட்சி அலுவலகத்தில் குழியில் போடப்படுகிறது எனும் தலைப்பில் இரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

 

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவற்றுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் ஹரியானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இவை அம்மாநில சுகாதார துறை அலுவலர்கள் கெட்டு போன உணவுகளை அழிக்க நடவடிக்கை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.

அந்த வகையில் வைரலாகும் புகைப்படங்களுக்கும், சமீபத்திய பீகார் தேர்தல் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.