அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம்‌ வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில்‌ எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.

சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகின்றது. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாத பொருள் என்று அர்த்தம்.அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவரா நீங்க? இந்த பொருட்களும் அதிர்ஷ்டம் கொடுக்கும் | Buy These 5 Things If You Are Not Opting For Gold

10 ஆம் திகதி  காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு வரை நீடிக்கின்றது.

அட்சய திருதியை நாளில் நகை வாங்க உகந்த நேரம் மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினமும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை கொடுக்கும். 

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவரா நீங்க? இந்த பொருட்களும் அதிர்ஷ்டம் கொடுக்கும் | Buy These 5 Things If You Are Not Opting For Goldதங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ச்துக்கொண்டே செல்வதால் பலருக்கும் தங்கம் வாங்குவது  கடினமான விடயமாக மாறிவிட்டது. 

அதனால் அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட வேறு என்னென்ன  பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் கொடுக்கும் என பார்க்கலாம்.

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவரா நீங்க? இந்த பொருட்களும் அதிர்ஷ்டம் கொடுக்கும் | Buy These 5 Things If You Are Not Opting For Gold

வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம், புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு பதிலாக வாங்குவதும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவரா நீங்க? இந்த பொருட்களும் அதிர்ஷ்டம் கொடுக்கும் | Buy These 5 Things If You Are Not Opting For Goldமேலும் இந்த நாளில் உங்களால் முடிந்தவற்றை ஏழைகளுக்கு தானம்  கொடுப்பதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை முழுமையா பெற உதவும்.