விஜய் - சங்கீதா
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி விசாரனைக்கு வந்தபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர்ல் முதல் விஜய் பங்கேற்றிருந்ததால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்டது.

அதேசமயம், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகி, தான் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாக கூறினார். இதனைதொடர்ந்து அவரது கோரிக்கையை நிதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அந்த வழக்கை முடித்து வைத்தது.
பிரிட்டன் பயணம்
இந்நிலையில், விஜய்யின் பிரிட்டன் பயணம் மீண்டும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறது.

குறிப்பாக லண்டனில் இருக்கும் சங்கீதாவை அவர் சந்திப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் குடும்பத்தினர் சமரசம் செய்திருக்கலாம் என்ற கருத்தும் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இதுகுறித்து விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் தரவில்லை. லண்டனில் விஜய் தன் மனைவி மற்றும் மகள் திவ்யா சாஷாவை சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பாகவுள்ளது. அது நடக்குமா? என்று செப்டம்பர் 10 ஆம் தேதிதான் தெரியவரும்.
