ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, குறிப்பிட்ட சில கிரகங்களின் சேர்க்கையால் பல வருடங்களுக்கு பின் சில அரிய யோகங்கள் உருவாகுவது வழக்கம்.
அந்த வகையில், 300 ஆண்டுகளுக்கு பின்னர், சனி, புதன் மற்றும் சுக்கிரன் இணைகிறது.
இந்த இணைவு காரணமாக திரிகிரஹி யோகம், பத்ர யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகம் உருவாகவுள்ளது.
குறித்த பெயர்ச்சி நடக்கும் பொழுது நான்கு ராசிகளில் விதி மாறி, அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அப்படியாயின், 300 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாகும் யோகத்தினால் அதிர்ஷ்டத்தில் நனையவுள்ள ராசிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையால் நிதி பலன்கள் அதிகமாக கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்து பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என காத்திருப்பார்கள். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பயணம் லாபகரமாக இருப்பதால் நீங்கள் நாட்டில் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்தால் மகிழ்ச்சியான தகவல் வரும். |
துலாம் | கிரக ராஜ யோகங்களினால் மூன்று கிரகங்களின் சேர்க்கை இடம்பெறவுள்ளது. இதனால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தனயோகம் எதிர்பாராத வழியில் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். எந்த வேலையிலும் அவர்கள் பயனடைவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். |
மகரம் | 300 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் மூன்று ராஜ யோகங்கள் காரணமாக எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். மகிழ்ச்சி மற்றும் செல்வம் இரண்டையும் தன யோகம் தருகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை அதிகமாக இருப்பதால் வீட்டிலுள்ள சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணங்கள் சிறப்பான பலன்களை தரும். |
கன்னி | கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். பத்ரா, திரிகிரஹி, மாலவ்ய ராஜ யோகங்களால் சுப பலன்கள் அதிகமாக கிடைக்கும். வாழ்க்கை நிதி ரீதியான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் இலகுவாக இருக்கும். |